Sunday, October 26, 2008

HAPPY DIWALI அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

என் இனிய நண்பர்களே, உங்கள் இல்லங்களில் தீபமேற்றி
இந்த திருநாளில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ
எனது இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.






நாங்க இப்படிலாம் பட்டாசு வெடிச்சு கொண்டாடுவோம்.
அப்ப நீங்க?

Sunday, October 19, 2008

Cancer Update from Johns Hopkins University

This information is being circulated at Army Medical Center as well.
-->
No plastic containers in micro
No water bottles in freezer.
-->
No plastic wrap in microwave...


A dioxin ! chemical causes cancer, especially breast cancer.
Dioxins are highly poisonous to the cells of our bodies. Don't freeze your plastic bottles with water in them as this releases dioxins from the plastic.
-->
Recently, Edward Fujimoto, Wellness Program Manager at Castle Hospital , was on a TV program to explain this health hazard. He talked about dioxins and how bad they are for us.
He said that we should not be heating our food in the microwave using plastic containers.. .
-->
This especially applies to foods that contain fat.
-->
He said that the combination of fat, high heat, and plastics releases dioxin into the food and ultimately into the cells of the body...
Instead, he recommends using glass, such as Corning Ware, Pyrex or ceramic containers for heat! ing food... You get the same results, only without the dioxin. So such things as TV dinners, instant ramen and soups, etc., should be removed from the container and heated in something else.
Paper isn't bad but you don't know what is in the paper. It's just safer to use tempered glass, Corning Ware, etc.
He reminded us that a while ago some of the fast food restaurants moved away from the foam containers to paper. The dioxin problem is one of the reasons...

-->Also, he pointed out that plastic wrap, such as Saran, is just as dangerous when placed over foods to be cooked in the microwave. As the food is nuked, the high heat causes poisonous toxins to actually melt out of the plastic wrap and drip into the food.
Cover food with a paper towel instead.

Monday, September 29, 2008

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ சில டிப்ஸ்....

இதோ சில டிப்ஸ் உங்கள் உபயோகத்திற்கு:

1. சின்னதா ஒரு டிடெக்டிவ்
ஏஜென்ஸியை உங்கள்
அலுவலகத்திற்குள்ளாவே உருவாக்கி அடுத்தது யார்
வேலையிலிருந்து விடுபட போகின்றார் என்பதை
கண்டறியுங்கள்.

2. உங்க பாஸுக்கு சும்மா சும்மா BLANK CALL பண்ணுங்க.

3. உங்கள் யாகூ ID யிலிருந்து Gmailக்கு ஒரு மெயில்
அனுப்புங்க, உடனே அதை திறந்து பாருங்க. மெயில் வர
எவ்வளவு நேரம் ஆகுதுன்னு செக் பண்ணுங்க.இந்த முறையை
அப்படியே ரிவர்சில் பண்ணுங்க.

4. மற்றவர்கள் பயன் படுத்தும் நாற்காலி,பிரிண்டர் ஆகியவற்றை
அடிக்கடி இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் வரச்
செய்யுங்கள்.

5. உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள்.இன்னுமும் போர்
அடித்தால் கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்கள்.

6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவர்களின் முக
பாவனையை பாருங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும்.
உங்கள் முக பாவனைகளையும் அவ்வபோதுமாற்றுங்கள்.
அப்போது தான் நீங்கள் வேலை செய்வது போல தோன்றும்.

7. இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக் கொள்ளூங்கள்.
சமுதாயப் பிரச்சனைகளை அலசுங்கள்.

8. விசில் அடிக்க பழகி கொள்ளுங்கள்.

9. போன மாதம் அல்லது போன வாரம் நாளிதழை படியுங்கள்.

10. தேநீர் பருகிய கப்பை குறிபார்த்து குப்பைத்தொட்டியில்
எறிய பயிற்சி எடுங்கள்.

11. தொலைபேசியை எடுத்து தற்போது உபயோகத்தில் இல்லாத
எண்களுக்கு போன் போடுங்கள்.

12. உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை
அப்ளிகேஷசனை திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.

13. கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள்.பிறகு
ரிசைக்கிள் பின்னிலிருந்து ரீ-ஸ்டோர் செய்து விளையாடுங்கள்.
திரும்ப திரும்ப இதையே செய்யுங்கள்.

14.உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள நாற்காலியில் எவ்வளவு
தூரம்
சாய முடியுமோ அவ்வளவு சாய்ந்து பாருங்கள்.

இதுக்கும் மேல போர் அடிச்சா இதயே திரும்ப திரும்ப செய்து
பாருங்க.

Tuesday, September 02, 2008

காய்கறிகளில் என்ன இருக்கிறது?

வாழைக்காய் உண்ணத்தக்க பகுதி - 58%

ஈரம் - 83.2 கிராம்
புரதம் - 1.4 கிராம்
தாது உப்புகள் - 0.5 கிராம்
நார் - 0.7 கிராம்
சர்க்கரைச் சத்து - 14.0கிராம்
எனர்ஜி -64 கிராம் கலோரி
கால்சியம் - 19 மி.கி.
பாஸ்பரஸ் - 20 மி.கி.
இரும்பு - 0.6 மி.கி.
தையமின் - 0.5 மி.கி.
ரிபோபிளேவின் - 0.1 மி.கி.
நியாசின் - 0.3 மி.கி.
வைட்டமின் சி - 24 மி.கி.

பலன் பித்தம் குறைக்கும், தலைச்சுற்று நீக்கும், பித்த வாந்தியைக் குறைக்கும், உடற்சூடு தணிக்கும், சூட்டு இருமல் தணிக்கும், உமிழ்நீர் சுரக்கும்.

முருங்கைக்காய் உண்ணத்தக்கது - 83%
ஈரம் - 86.9 கிராம்
புரதம் - 2.5 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
தாதுஉப்புகள் -2.0 கிராம்
நார் - 4.8 கிராம்
சர்க்கரை - 3.7 கிராம்
எனர்ஜி - 26 கி.கலோரி
கால்சியம் - 30 மி.கி.
பாஸ்பரஸ் - 110 மி.கி.
இரும்பு -5.3 மி.கி
தையமின் - 0.05மி.கி.
ரிபோபிளேவின் -0.07 மி.கி.
நியாசின் - 0.2 மி.கி.
வைட்டமின் சி - 120 மி.கி.

பலன் சளியைப் போக்கும், ஆண்மை மிகுவிக்கும், ஊளைச்சதை நீக்கும், எலும்பு வலுவாகும், பல் ஆட்டத்தை நிறுத்தும், காயங்களைக் குணமாக்கும், சோகை தீர்க்கும், ஈறுகளுக்கு உறுதி அளிக்கும்.

காலி ஃபிளவர் உண்ணத்தக்கது - 70%
ஈரம் - 90.8 கிராம்
புரோட்டின் - 2.6 கிராம்
கொழுப்பு - 0.4 கிராம்
தாது உப்புகள் - 1.0 கிராம்
நார் - 1.2 கிராம்
சர்க்கரை - 4.0 கிராம்
எனர்ஜி - 30 கி.கலோரி
கால்சியம் - 33 மி.கி.
பாஸ்பரஸ் - 57 மி.கி.
இரும்பு - 1.5 மி.கி.
தையமின் - 0.04 மி.கி.
ரிபோபிளேவின் - 0.10 மி.கி.
நியாசின் - 1.0 மி.கி.
வைட்டமின் சி - 56 மி.கி.

பலன் சூட்டைத் தணிக்கும், சளி குறைக்கும், உடல் வறட்சியைப் போக்கும், இருமல் குறைக்கும், வாய் துர்நாற்றம் நீங்கும், இளைப்பு நீங்கும், மேனியை மினுமினுப்பாக்கும்.

தக்காளிப் பழம் உண்ணத்தக்கது - 100%
ஈரம் - 94.0 கிராம்
புரோட்டின் - 0.9 கிராம்
கொழுப்பு - 0.2 கிராம்
தாதுஉப்புகள் - 0.5 கிராம்
நார் - 0.8 கிராம்
சர்க்கரை -3.6 கிராம்
எனர்ஜி - 20 கி.கலோரி
கால்சியம் -48 மி.கி.
பாஸ்பரஸ் - 20 மி.கி.
இரும்பு - 0.4 மி.கி.
தையமின் - 0.12 மி.கி.
ரிபோபிளேவின் - 0.06 மி.கி.
நியாசின் - 0.4 மி.கி.
வைட்டமின் சி - 27 மி.கி.

பலன் மேனியை மினுமினுப்பாக்கும், வறட்சியைப் போக்கும், தாகம் தணிக்கும், உமிழ்நீரைச் சுரக்க வைக்கும்.

முட்டைக்கோஸ் உண்ணத்தக்கது - 88%

ஈரம் - 91.9 கிராம்
புரோட்டின் - 1.8 கிராம்
கொழுப்பு - 0.1. கிராம்
தாது உப்புகள் -0.6 கிராம்
சர்க்கரை - 4.6 கிராம்
எனர்ஜி - 27 கி கலோரி
கால்சியம் - 39 மி.கி.
பாஸ்பரஸ் - 44 மி.கி.
இரும்பு - 0.8 மி.கி.
தையமின் - 0.06 மி.கி.
ரிபோபிளேவின் - 0.09 மி.கி.
நியாசின் - 0.4 மி.கி.
வைட்டமின் சி - 124 மி.கி.

பலன் உடல் வளரச் செய்யும், கண் பார்வை மிகும், தோல் அழகாகும், பற்கள் உறுதியாகும், நரம்புகள் பலமாகும், தொற்று நோய்களைத் தடுக்கும், கருவுற்ற பெண்களுக்கு நல்லது, எலும்புக்கு உறுதி ஏற்படுத்தும், முடி கொட்டாது.

வெங்காயம் உண்ணத்தக்கது -84%
ஈரம் - 89.1 கிராம்
புரதம் - 1.9 கிராம்
கொழுப்பு - 0.2 கிராம்
தாது உப்புகள் - 0.7 கிராம்
நார் - 1.2 கிராம்
சர்க்கரை - 6.4 கிராம்
எனர்ஜி - 35 கி
கலோரி
கால்சியம் - 66 மி.கி.
பாஸ்பரஸ் - 50 மி.கி.
இரும்பு - 1.5 மி.கி.
தையமின் - 0.10 மி.கி.
நியாசின் - 0.6 மி.கி.
வைட்டமின் சி - 13 மி.கி.

பலன் வாய் துர்நாற்றம் போக்கும், மலப்பிரச்னைகள் தீரும், உடம்பில் மினுமினுப்பு உண்டாக்கும், வறட்சி நீக்கும், வாதம், பித்தம், கபம் இவைகளைச் சமப்படுத்தும்.


பீட்ரூட் உண்ணத்தக்கது - 85%

புரோட்டின் - 1.7 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
தாது உப்புகள் - 0.8 கிராம்
நார் - 0.6 கிராம்
சர்க்கரை - 8.8 கிராம்
எனர்ஜி - 43 கி
கலோரி
கால்சியம் - 18 மி.கி.
பாஸ்பரஸ் - 55 மி.கி.
இரும்பு - 1.0 மி.கி.
தையமின் - 0.04 மி.கி.
ரிபோபிளேவின் - 0.09 மி.கி.
நியாசின் - 0.4 மி.கி.
வைட்டமின் சி - 10 மி.கி.

பலன் இரத்தம் சுத்தமாகும், மலப்பிரச்னைகள் தீரும், சூடு தணிக்கும், முகம் அழகாகும், தோல்வறட்சி நீங்கும், இரத்த சோகை போக்கும், கை கால் சோர்வைப் போக்கும், உடம்பு நிறம் கூடும்.

பச்சைப் பட்டாணி உண்ணத்தக்கது - 100%
ஈரம் - 16 கிராம்
புரதம் - 19.7 கிராம்
கொழுப்பு - 1.1 கிராம்
தாதுஉப்புகள் - 2.2 கிராம்
நார் - 4.5 கிராம்
சர்க்கரை - 56.5 கிராம்
எனர்ஜி - 315 கி கலோரி
கால்சியம் - 75 மி.கி.
பாஸ்பரஸ் - 288 மி.கி.
இரும்பு - 5.1 மி.கி.
தையமின் - 0.47 மி.கி.
ரிபோபிளேவின் - 0.19 மி.கி.
நியாசின் - 3.4 மி.கி.
வைட்டமின் சி - 140 மி.கி.

பலன் பசியைப் போக்கும், உடம்புக்கு சக்தி கொடுக்கும், குடல்புண்களை ஆற்றும், மூளைக்குத் தேவைப்படும் சக்தியைக் கொடுக்கும்.

நன்றி: குமுதம் ஹெல்த்.

Wednesday, August 13, 2008

CLOSE 2 HEART...

One Look
One smile
One touch
One embrace
One Love
One Kiss....
Two people
Two Minds
Two soul
Two destinies
ONE ROAD
ONE JOURNERY
ONE ENDING
TOGETHER....

Friday, July 11, 2008

ஆஹா கவிதை!!

நட்சத்திரங்களோடு கூடிய நிலா
அழகாக தெரிகிறது
இது நாள் வரை....



மேகங்கள் தழுவி செல்லும் நிலா
அழகாக தெரிகிறது
இன்று வரை

காரணம் இனியவளே நீ....

மனித வாழ்க்கையே ஒரு நாடகம்

படித்த போது வெறுத்தது.

ஆனால் என் வாழ்க்கையில்

நீ வந்த போது தான்

என் பாத்திரம் புரிந்தது

நானும் ஒரு நாயகன் என்று.

நீ உடுத்தும் ஆடைகள் எல்லாமே

ஒருவித அழகாகத் தானிருக்கின்றன.

புரிந்து கொண்டேன்,

நீ உடுத்துவதால்

உன் உடலின் மீது பட்டு

அவை அழகு பெறுகின்றது என்று.

டிஸ்கி: இது எல்லாமே ஆஹா FM ல இருந்து சுட்டது.மக்களே என் மீதுகேஸ் போட்டு விடாதீர்கள்.

Thursday, June 12, 2008

ஜூன் மாத PIT போட்டிக்கு நானும் நளனும்...

நானும் என்னோட நளனும். பிட் ஜூன் போட்டிக்கு


நானும் நள மகாராஜாவும் முடிவே பண்ணிட்டோம்,
இதுல எங்களுக்குதாங்க பரிசு குடுக்கறேன் னு
சொல்லியிருக்காங்க. அட நிஜம் தாங்க நம்புங்க....
அதுக்காகத் தான்,நானும் இப்போ வந்துட்டோம்ல,
நீங்களே சொல்லுங்க, நள மகாராஜா தன் திறமைய
எவ்ளோ அழகா சமயல்ல காமிக்கறாருனு பாருங்க.
ஹி ஹி ஹி ஹி... எல்லாம் ஒரு ஆசை தான்.
இந்த பிட் ல கலந்துக்கனும் னு. நம்ம கையால
எடுத்த போட்டோவுக்கு என்ன ஒரு ஸ்ரீராமோ இல்ல
அசோக்குமாரோ பரிசு குடுக்க போறதில்லை, அதான்
அட்லீஸ்டு இவங்களாவது குடுக்கறேனு சொல்றாகளேன்னு.
முடிவே பண்ணிட்டேன். பரிசு இல்லாம வுடறதில்லைனு.

Wednesday, May 21, 2008

இது நியாயமா?

ஹாய் மக்கள்ஸ், இதெல்லாம் நியாயமே இல்லீங்க,
சரி நீங்க என்ன நினைக்கறீங்க?

Thursday, May 15, 2008

5 ஸ்டார் ஹோட்டல்னா சும்மாவா?

Answer: "tea please"
Question : " Ceylon tea, Herbal tea, Bush tea, Honey bush tea, Ice tea or green tea ?"
Answer : "Ceylon tea "
Question : "How would you like it ? black or white ?"
Answer: "white"Question: "Milk, Whitener, or Condensed milk ?"
Answer: "With milk
"Question: "Goat milk, Camel milk or cow milk"
Answer: "With cow milk please.
Question: " Milk from Freeze land cow or Afrikaner cow?"
Answer: " Um, I'll take it black.
"Question: " Would you like it with sweetener, sugar or honey?"
Question: " Beet sugar or cane sugar ?"
Answer: "Cane sugar "
Question:" White , brown or yellow sugar ?"
Answer: "Forget about tea just give me a glass of water instead."
Question: "Mineral water or still water ? "
Answer: "Mineral water"
Question: "Flavored or non-flavored ?"
Answer: "I'll rather die of thirst

Wednesday, April 30, 2008

எனக்குள் ஓர் மின்னல்..கனவு!!

கனவு!!ஆஹா எத்தனை இனிமையானது,

என் காதல் நிறைவேறியது,கனவில்...
காதலுடன் டுயட் பாடியது,கனவில்..

வானத்தில் பறந்தது,கனவில்..
வனத்தில் வாழ்ந்தது கனவில்..

அமெரிக்காவில் வலம் வந்தது,,கனவில்..
ஆப்பிரிக்காவில் நடந்தது,,கனவில்..

மாளிகையில் வாழ்ந்தது,,கனவில்...
மாண்புமிகு.முதல்வர் ஆனதும்,கனவில்..

பிடித்த மகிழ்வுந்தில் சென்றது,,கனவில்..
பிடித்த புகையை விட்டது,கனவில்..

காந்தியுடன் தண்டி யாத்திரை சென்றது,கனவில்..
கார்கில் போரில் சண்டை இட்டு மாண்டது,கனவில்..

சாய்ந்த கோபுரத்தை சாய்ந்துகொண்டு பார்த்தது,கனவில்..
சமயம் கிட்டும் போதெல்லாம் லண்டன் சென்றது,கனவில்..

தாஜ்மகாலை என் காதலிக்காக கட்டியது,கனவில்..
தாகம் ஏனும் போது பாலாறு தண்ணீர் வந்தது,கனவில்..

ஈபில் கோபுரத்தில் உச்சியில் நின்று காற்றுவாங்கியது,கனவில்..
ஈடி படத்தைபோல்(ஆங்கிலம்)அதிசயம் நிகழ்த்தும்,கனவில்..

கனவு எத்தனை இனிமையானது...நிஜத்தில் அல்லா கனவில்...
வாழ்க வளமுடன்...

ஒரு முகமறியா நண்பன் எனக்கு ஆர்குட்டில் அனுப்பியது.

Thursday, April 24, 2008

லால்பாக்- நடந்தது என்ன?

பொழுது புலர்ந்தது
அழைத்தவரும் வந்தார்
கைநிறைய ஸ்ரீ கிருஷ்ணாவுடன்.

காண வந்த தோழி கொடுத்ததோ அல்வா
அவருக்காகவே அசல்
நந்தினியால் மணக்க மணக்க
தயாரிக்கப் பட்டது அல்லவா?

தான் பெற்ற இன்பத்தை
பகிர்ந்து கொண்டார் அம்பியுடனும்
தம்பியுடனும் அல்வாவும் சேர்த்தே.


நாட்டு நடப்பு முதல் அவர் தம்
வீட்டு நடப்பு வரை
பலவிதமான பட்டிமன்ற தலைப்புகளில்
விவாதங்களும் விளக்கங்களும்,
பாவம் சாலமன் பாப்பையா இருந்திருந்தால்
நடுவர் பதவியையே துறந்திருப்பார்.

தலைவியின் வீட்டு விருந்து
நடுநடுவில் பலரின் அழைப்பு,
சளைக்காமல் சமாளித்தார்
ஆன்மிகப் பதிவர்.

விருந்து முடிந்தது.
மற்றொரு நண்பர் வந்தார்,
அவருக்கென்ன எங்கு செல்ல விரும்பினாலும்
நண்பர்களும் வாகனங்களுடன்
தயாராக இருக்க வேறென்ன குறை
மற்ற சிஷ்ய கேடிகள் அழைக்க
அடிவாங்க தாயாரானார் கேஆரெஸ்
நாராயணன் கூட இருக்கிறார்
என்ற நம்பிக்கையில்.

மீண்டும் ஒரு கூட்டம்.
அங்கே மீண்டும் இவருக்கு ஒரு சோதனை
மைசூர்பா வடிவாக........
மணக்க மணக்க சூடாக
அவருக்கு சவாலாக.

அங்கே நண்பர்கள் பலர் கூடி
அவரின் மெளனத்தை கலைக்க
முயன்றனர். தோற்றனர்.

பலவிதமான தலைப்புகளில்
விதவிதமான அனுபவங்கள்.
பா(ர்)க்கும் போது மனது இனித்தது

பறவையையும் இயற்க்கையையும்
படம் பிடித்த காட்சி மனதை விட்டு நீஙகுமா
என்கிறது.


இவரின் அன்புத் தொல்லை தாங்காமல்
தமிழையும் தமிழனையும் கூட
அடிக்காமல் விட்டு விட்டனர்
காவேரிக்காரர்கள்.
இது எப்படி....

Tuesday, March 18, 2008

சிறு குறிப்பு வரைக - முத்தம்..

Definition of a kiss and Prof:
Prof. of Economics:
Kiss is that thing for which the demand is aways higher than the supply.

Prof. of Accountancy:
Kiss is a credit because it is profitable when returned.

Prof. of Algebra:
Kiss is infinity because two divided by nothing.

Prof. of Geometry:
Kiss is the shortest distance between two lips.

Prof. of Physics:
Kiss is the contraction of mouth due to the expansion of the heart.

Prof. of Chemistry:
Kiss is the reaction of the interaction between two hearts.

Prof. of Physiology:
Kiss is the juxtaposition of two orbicularisoris muscles in the state of contraction.

Prof. of Dentistry:
Kiss is infectious and antiseptic.

Prof. of Philosophy:
Kiss is the persecution for the child, ecstasy for the youth and homage for the old.

Prof. of Comp.Science:
What is a kiss? It seems to be an undefined variable!

Prof. of English:
Kiss is a noun that is used as a conjunction, it is more common than proper, it is spoken in the plural and it is applicable to all.

Prof. of Architecture:
Kiss is a process which builds a solid bond between the two dynamic objects.

Friday, March 14, 2008

Java Interview attended by our dear Banta...

Q. What is the difference between an Abstract class and Interface?
A. Terms are different ... nothing more.

Q. What is JFC ?
A. Jilebi, Fanta & Coffee.

Q. Explain 2 tier and 3 -tier Architecture ?
A. Two wheelers like scooters will have 2 tyres and autorickshaws will have 3 tyres.

Q. I want to store more than 10 objects in a remote server? Which methodology will follow?
A. Send it through courier.

Q. Can I modify an object in CORBA?
A. As you wish , I do not have any objections.

Q. How to communicate 2 threads each other ?
A. Sorry, Non living things can't communicate.

Q. Explain RMI Architecture?
A. I am a computer professional not an architect student.

Q. What is the use of Servlets ?
A. In hotels, they can replace servers.

Q. What is the difference between Process and Threads?
A. Threads are small ropes. Make a rope from threads is an example for process.

Q. What is JAR file ?
A. File that can be kept inside a jar.

Q. What is JINI?
A. A ghost which was Aladdin's friend.

Q. How will you call an Applet from a _Java Script?
A. I will give invitation.

Q. What is bean ? Where it can be used ?
A. A kind of vegetable. In kitchens for cooking they can be used.

Q. Write down how will you create a binary Tree ?
A. When we sow a binary seed, a binary tree will grow.

Wednesday, February 20, 2008

Dynamite Speech by a Desi School Master...

A Schoolmaster from a remote rural area was transferred to a school in Bombay. He reported for duty two days before August 15 and, as was the practice in the school, was asked to address the assembly on Independence Day.
Here's his dynamite speech :

Leddies and Gentulmens, Contemporaries, Children, "This is my first maiden speech. If small small mistakes get inside my speech, I ask pardon. Stickly speaking, I wanted to joint your school more fastly, but for the following reason.

Too much time lost in getting slipper reservation in three-tyre compartment. The clerk rejected to give ticket. I put complaint on station master. He said me to go to lady clerk. At first she also rejected. I then pressed her for long time and at last with great difficulty she gave a birth only to my son. Anyway I thanked the station master because he was responsible for getting birth of my son.
We got independent because of great leaders linke Gandhiji who get-outted all angrezi peoples from India. Tilak said Swaraj is our birth-rate and we shall halve it. Today we all halve our birth-rate. You children are future dynamic generators of the Nation.
Look into future time only. No backside looking, or looking at your behind. Be like great like X' raj Ranjan of Germany or Presidents like Loosebelt.
You know genius, no? It is one per cent perspiration and ninety seven percent evaporation. They became great by reading great books. After we finish you here in the school, you can go to college and get B.A., M.A. and other decrease. Then you can become great liars in the supreme courts, shattered accountants, or leacherers in college.
The school is like a garden. You are the seeds, school is the soil. We will bury you in this soil, pour water of knowledge on your heads and one day will become great phools.Many vacancy job come in newspapers. Only yesterday I saw in paper "Wanted for refuted engineering firm: Generators, highpower condensors" so and so forth, etc. These jobs may be teknickel, but you can rise. If you have flare in English, you can become teacher.
I am now ending this fastly. My God blast you! Thank you and thank God I am finished. Joy Hind!"

Tuesday, February 19, 2008

ஆதலினால் காதல் செய்வீர்.....







மக்களே இந்த படங்களுக்கும் தலைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
இதெல்லாமே தினகரன்ல இருந்து எடுத்தது, அதாவது G3 பண்ணது.

Wednesday, February 13, 2008

How children think of there dad at different ages

At 4 Years My daddy is great.

At 6 Years My daddy knows everybody.

At 10 Years My daddy is good but is short tempered

At 12 Years My daddy was very nice to me when I was young.

At 14 Years My daddy is getting fastidious.
At 16 Years My daddy is not in line with the current times.
At 18 Years My daddy is becoming increasingly cranky.
At 20 Years Oh! It's becoming difficult to tolerate daddy.
Wonder how Mom puts up with him.
At 25 Years Daddy is objecting to everything.
At 30 Years It's becoming difficult to manage my son. I was so scared of my father
when I was young.
At 40 Years Daddy brought me up with so much discipline. Even I should do the same.
At 45 Years I am baffled as to how my daddy brought us up.
At 50 Years My daddy faced so many hardships to bring us up. I am unable to
manage a single son.
At 55 Years My daddy was so far sighted and planned so many things for us.
He is one of his kind and unique.
At 60 Years My daddy is great.
Thus, it took 56 Years to complete the cycle and come back to the 1st stage!

Thursday, February 07, 2008

ரோஜாவில இவ்ளோ மேட்டரா?

ஹாய், இது காதல் மாதம் இல்லையா, அதனால் தான் இந்த டிப்ஸ்.

ரோஜா அழகானது மட்டுமல்ல... பலவித உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடியது. அதனால் தான் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ரோஜாவைப் பிடிக்கிறது. காதல், நட்பு, நன்றி, ஜாலி என அனைத்து உணர்வு களையும் வெளிப்படுத்த ஒரு அடையாளச் சின்னமாக விளங்குகிறது இந்த ரோஜாக்கள். ‘‘ரோஜாக்களின் வண்ணங்களை வைத்தே கொடுப்பவர்களின் எண்ணத்தையும் தெரிந்து கொள்ளலாம்’’.

சிவப்பு ரோஜா அன்பை வெளிப்படுத்தும் சின்னம். ரோஜாவில் சிவப்பு நிறம் அதிகரிக்க... அதிகரிக்க... அன்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம்!

« பிங்க் ரோஜாக்கள்... சந்தோஷம், ஆதரவு, நட்பு, இரக்க உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தும்.

« லைட் பிங்க் கலர் ரோஜா என்றால் ஜாலி, விருப்பம், பெருந்தன்மை மற்றும் பாராட்டுதலைத் தெரிவிப்பதற்கு.

« டார்க் பிங்க் கலர் ரோஜாக்கள் நன்றி மற்றும் விசுவாசத்தின் அடையாளம்.

« லாவண்டர் ரோஜாக்கள் கண்டவுடன் காதலை வெளிப்படுத்தும் அறிகுறியாகும்.

« வெள்ளை ரோஜாக்கள் சுத்தமான காதலின் சின்னமாகும்.

« மஞ்சள் வண்ண ரோஜா கொடுத்தால் ‘உனக்கு நானிருக்கிறேன்’ என்று அர்த்தம்.

« மெரூன் மற்றும் ஆரஞ்சு கலர் ரோஜாக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை வெளிப்படுத்தும்.

« மஞ்சளும், இளஞ்சிவப்பும் கலந்து உருவான ரோஜாக்கள், பெருமையின் அடையாளம்.

« வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்கள் கலந்த ரோஜாக்கள் ஒற்றுமையின் அடையாளம்.

« சிகப்பு மற்றும் மஞ்சள் கலந்த ரோஜாக்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க.

« ஒற்றை ரோஜா, ‘உன்னை மட்டுமே காதலிக்கிறேன்’
என்பதை உணர்த்துவதற்கு.

« இரண்டு ஒரே கலர் ரோஜாக்கள் திருமணத்திற்கான நிச்சயத்தை உணர்த்துகின்றன.

நன்றியைக் காட்ட பூங்கொத்தில் 12 ரோஜாக்களும், வாழ்த்துக்களைத் தெரிவிக்க 25 ரோஜாக்களும், எல்லையில்லா காதலைப் பறை சாற்ற 50 ரோஜாக்களும் தேவை.

(ரோஜாவில் இவ்ளோ வாசனையா... ஸாரி, இவ்ளோ மேட்டரா?)

இதெல்லாம் இந்த மாசம் சிநேகிதில சொல்லியிருக்காங்க.
உங்களுக்கு எந்த கலர் ரோஜா வேனுமோ சும்மா தாராளமா குடுத்து அசத்துங்க அடுத்த வாராம். ஆனா யார் யாரு எந்த கலர்ல குடுத்தீங்கன்னு எனக்கு மட்டும் அப்பறமா சொல்லிடுங்கப்பா..ஏன்னா எல்லாம் சும்மா ஒரு ஜாலிக்காகத் தானே..ஹி ஹி ஹி...

Saturday, February 02, 2008

What's the problem honey!

A wife awoke early one morning to the sounds of her husband angrily banging around pots and pans in the kitchens.

When she goes downstairs, she sees that he is looking for something to eat but, more importantly, is very upset about something.

"What's the problem, darling? Didn't your program work?"

"It worked. I wrote that code until the wee hours of the morning, and it worked!"

"Then what's the matter? Were there a lot of bugs in it?"

"I took special pains to eliminate the bugs. It worked, and it worked perfectly!"

"So what's wrong?"

"I was so tired when I finished, I decided to take a little nap, just for a few minutes."

"Did you not sleep well? Did you have a nightmare?" the concerned wife inquired.

"No, I slept perfectly well... with my head on the backspace key."

haa haa haa haaaaaaaaaaaaaaaaa.....

Monday, January 28, 2008

சிவபூஜைப் பலன்கள்...

சிவ பக்தர்களுள் சிறந்தவர் அவர்; சைவத்தின் மூலமாகத் தெய்வவீகத்தைப் பரப்பியவர். அந்தக் காலத்திலேயே பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று சிவபெருமானின் புகழைப் பேசினார். கேட்போர் மனத்தின் இருளறு சொல்லிற்குச் சொந்தக்காரர். நித்தய சிவபூஜை செய்ததால் உலக இன்ப துன்பங்கள் அநித்தியம் என்பதைக் கண்டவர்; ஆதலால் மக்களுக்கு ஆழமான உணர்வுடன் ஆன்மிகத்தை எடுத்தோதினார். யார் அந்த சிவப்பழம்?


அவர்தான் சைவத் திரு. அ.மு. சரவண முதலியார். சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த-தமிழ் அறிஞர்களில் முக்கியமானவர்.
அந்த நிகழ்ச்சி ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது. தெய்வ பூஜை செய்பவர்கள் காலத்தை மீறித்தான் காணப்படுகிறார்கள். 1958-ஆம் ஆண்டு.


சரவண முதலியார் அப்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் உடல் நலமின்மையால் சேர்க்கப்பட்டிருந்தார். அனுதினம் சிவதியானமும் தேவார பாராயணமுமாக இருந்த அவருக்கு மருத்துவமனையிலும் தெய்வ சிந்தனை கை கூடியிருந்தது. அவருடன் அவரது மகனும் தங்கி சேவை செய்து வந்தார். டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியம் அந்தக் காலத்தில் புகழ் பெற்ற மருத்துவர். சரவண முதலியார் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் செட்டியார் ஒருவரும் சிகிச்சை பெற்றுவந்தார்.


அன்று டாக்டர் அவருக்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்த பிறகு அவருக்குத் ¨தைரியமூட்டும் வகையில், "செட்டியாரே, நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்களைச் சுகப்படுத்தி வீட்டிற்கு அனுப்ப வேண்டியது என் பொறுப்பு" என்று கூறினார்.


'சிவன் செயலே யாதும்' என்று தெளிந்த அறிவுடை சரவண முதலியார் இதைக் கேட்டு சிரித்துவிட்டார். இதனால் மருத்துவர் கோபிப்பாரே என்று முதலியாரின் மகன் உள்ளளூ பயந்தார். மகன் இவ்வாறு கலங்கி இருக்க தந்தையோ இன்னும் பெரிதாகித் தெய்வீகச் சிரிப்பு சிரிக்க, மருத்துவர் மெல்ல சரவண முதலியார் கட்டிலுக்கு வந்தார். அவர், "பெரியவரே, எதற்காக இப்போது சிரித்தீர்? சொல்லும்" என்று வினவினார்.

சரவண முதலியாரின் மகனுக்கும் இதே கேள்வி நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருந்தது. சரவண முதலியார் மெதுவாக, "டாக்டர், உங்களை அவமானப்படுத்த நான் சிரிக்கவில்லை. நீங்கள் கூறியதைக் கேட்டதும் எனக்கு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறிய ஓர் உபதேசம் நினைவிற்கு வந்தது.

"பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார்: 'இறைவன் இரண்டு முறை சிரிக்கிறார். ஒன்று, இரு சகோதரர்கள் தங்களுக்குள் நிலத்தைப் பிரித்து, குறுக்கே கயிற்றைப் பிடித்து, 'இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னடையது' என்று சொல்லிக் கொள்ளும்போது அவர் சிரித்தார். 'இந்தப் பக்கம் என்னுடையது. அதில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது என்கிறார்களே! என்று நினைத்து இறைவன் சிரிக்கிறார்.

"கடவுள் மேலும் ஒருமுறை சி¡¢க்கிறார். குழந்தையின் நோய் தீர்க்க முடியாததாக உள்ளது; தாய் அழுது கொண்டிருக்கிறான்; வைத்தியர் அவளிடம், "அம்மா, பயப்படாதே. நான் குணப்படுத்திவிடுகிறேன்" என்று சொல்கிறார்.
அப்போதும் கடவுள் சிரித்துக்கொள்கிறார். இறைவன்தான் எல்லோருடைய விதியையும் நிர்ணயிக்க முடியும். நடக்கக்கூடியதைத் தடுக்க யாராலும் முடியாது என்பது வைத்தியருக்குத் தொ¢யவில்லை." இவ்வாறு சரவண முதலியார் கூறிய தத்துவத்தை டாக்டர் ரத்தின வேல் சுப்பிரமணியம் கேட்டு உணர்ந்தார். அவர் அடிப்படையில் ஓர் ஆன்மிகவாதி. ஆதலால் அவர் தமது எண்ணத்தை மேம்படுத்திக் கொண்டார். அன்றிலிருந்து அவர் தினமும் சரவண முதலியாரிடம் வந்து அடிக்கடி பேசத் தொடங்கினார். அவர்கள் இருவரும் முக்கியமாக, பெரியபுராணம் பற்றி நேரம் போவது தெரியாமல் பேசுவார்கள்.
மருத்துவரின் பவரோகத்திற்கு சரவண முதலியார் தெய்வ மருந்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவர் தினமும் சரவண முதலியாரிடம் வந்து அடிக்கடி பேசத் தொடங்கினார். அவர்கள் இருவரும் முக்கியமாக, பெரியபுராணம் பற்றி நேரம் போவது தெரியாமல் பேசுவார்கள். மருத்துவரின் பலரோகத்திற்கு சரவண முதலியார் தெய்வ மருந்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.


இதனால் சரவண முதலியாரின் மகன் ஒரு நாள் தம் தந்தையிடம், "அப்பா, டாக்டரின் நேரம் பொன்னானது. அவரது சேவை எல்லோருக்கும் தேவை. அதோடு, அதிகமாகப் பேசி நீங்கள் உங்கள் உடல்நலத்தைக் கொடுத்துக் கொள்ளவேணடாமே" என்று விண்ணப்பித்துக் கொண்டார். இந்த விண்ணப்பம் மருத்துவரின் செவிக்கும் எட்டியது. அதனால் அவர் சரவண முதலியாரின் சிவபரமான விளக்கங்களைத் தமது பகலுணவு நேரத்தில் வந்து கேட்பார். முதலியாரும் சளைக்காது சொல்லிக் கொடுத்தார். சிறிது காலத்திற்குப் பிறகு சரவண முதலியார் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ஓரிரு மாதங்களுக்குள் சரவண முதலியார் மீண்டும் நோய்வாய்ப்பட்டார். இம்முறை அவருக்கு மருத்துவம் செய்தவர் டாக்டர் குருசாமி முதலியார். டாக்டர் குருசாமி முதலியாரும் நல்ல சிவபக்தர். அவரைப் பற்றி அந்தக் காலத்தில் இப்படியொரு நம்பிக்கை இருந்தது; அவர் தினமும் காலையில் சிவபூஜை செய்து முடித்துக் கதவைத் திறந்து வெளியில் வருவார். அப்போது முதலில் அவரது கண்ணில்படுபவரின் வியாதி பரிபூரணமாகக் குணமாகும் என்ற மக்கள் நம்பினார்கள். இது சிவபூஜை அவருக்குக் கொடுத்திருந்த பலன். அன்று சரவண முதலியார் மகனும் அவர்களது குடும்ப மருத்துவர் ஏ. தியாகராஜனும் அந்த மருத்துவரைக் காணச் சென்றிருந்தார்கள்.


டாக்டர் குருசாமி முதலியார் பூஜை நேரம் முடிந்து வெளியில் வந்தார். டாக்டர் தியாகராஜன் சரணவண முதலியாரின் உடல்நலக்குறைவு பற்றிக் கூறிவந்து பார்க்குமாறு வேண்டினார். அதற்கு குருசாமி முதலியார் "மார்ச் 15-ஆம் தேதி போகிறவரை 1-ஆம் தேதியே கூட்டி வந்து ஏனய்யா வம்பு செய்கிறீர்கள்?" என்று கூறினார்.


சரவண முதலியாரின் மகனை மருத்தவ கூறிய அந்தச் செய்தி நிலைகுலையச் செய்தது. பின்னர் குருசாமி முதலியார் மெதுவாக, "அவர் சிவபூஜை செய்பவர். அவரைப்பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

1950, மார்ச் 13-ஆம் தேதி வீட்டில் சரவண முதலியாருக்கு நினைவு தவறி 'கோமா' நிலை ஏற்பட்டது. 14-ஆம் தேதியும் நினைவு திரும்பவில்லை. மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள். சரவண முதலியாரின் குடும்பம் தத்தளித்தது. அவரது மகன் செய்வதறியாது திகைத்தார். அவர் மனதில் பல பிரச்சனைகள் தோன்றினாலும், நெஞ்சை வாட்டும் ஒரு கேள்வி மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. அது தந்தையின் ஆன்மிகத்தைப் பற்றியது. 'வாழ்நாள் முழுவதும் சிவபூஜை செய்த ஒருவர் இப்படித்தான் சாவதா? என் தந்தை பக்தியுடன் சிவபூஜையின் சிறப்பு இவ்வளவுதானா?' -இவ்வாறான கேள்விகள் அவரைத் துளைத்தன. சரியாக மார்ச் 15-ஆம் தேதியும் வந்தது. ஏற்கனவே டாக்டர் குருசாமி முதலியார் கூறியது நினைவிற்கு வரவே எல்லோரும் பந்தனர்.


ஆன்மிக சாதகர்கள் வாழ்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்குச் சாவதும் முக்கியமானது. சிவபூஜை செய்த ஒருவர் இப்படித்தானா மற்றவர் போல் மறைவது? வீட்டில் சரவண முதலியாரின் உறவினர்கள் அறைக்கு வெளியில் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். மகனின் மனதிலிருந்த கேள்விகள் தான் எல்லோர் மனதிலும் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்தச் சூழல் பரபரப்பு மிகுந்திருந்தது. இனி தந்தையின் குரலைக் கேட்கவே முடியாதா? இது முதலியார் மனைவியின் ஏக்கம். நினைத்து நினைத்து ஏங்கத்தான் முடியும் என்று மனதைத் திடப்படுத்தும் போதுதான் அந்த ஒலி கேட்டது. ஆ, அது சரவண முதலியாரின் இருமல் சப்தம் அல்லவா? எல்லோரும் அவசரமாக உள்ளே நுழைந்தார்கள். சரவண முதலியார் தம் நிலையைப் பற்றி கவலைப்படாமல் தமது மனைவியிடம்,"இன்று விசேஷமான நாள். நீ ஏன் இன்று இன்னும் குளிக்காமல் இருக்கிறாய்? போய் உடனே குளித்துவிட்டு, பூஜை செய்" என்று பணித்தார். அவரது மகனிடமும், மகளிடமும் அவ்வாறே கூறினார்.

பிறகு தமது மருமகளை அழைத்தார். மருமகளைத் தமது மகளாகத் கண்டவர் அவர். அவரது கைமேல் தமது கைகளை வைத்து மூடினார். அவ்வாறு அவர் செய்தது அந்தக் கைகளில் சிவலிங்கம் இருப்பதான மானசீக யாவனையை உணர்த்தியது.பின்னர், தாம் தினமும் செய்யும் சிவபூஜை மந்திரங்களை ஒவ்வொன்றாகக் கூற ஆரம்பித்தார்.'ஈசான மூர்த்தாய நாம: தத்புருஷ பத்ராய நம: என்று தொடர்ந்தார்.

பூஜை மந்திரங்களுக்குப் பிறகு தேவாரம், திருவாசகம் ஓத ஆரம்பித்தார். உலக பந்தத்திலிருந்து விடுபடும் ஜீவன் பரமாத்மாவைச் சென்றடையும் ஆன்ம யாத்திரைக்கான துதிப்பாடல்கள்தாம் அவை. அவைகளை அவர் அனுபவ ஆதங்கத்தோடு பாடினார். எல்லோரும் சரவண முதலியாரையே கவனித்துக் கொண்டிருந்தனர். திருவாசகப் பாடல்கள் சிலவற்றைப் பாடி முடித்தார். இறுதியாகப் பட்டினத்தாரின் 'கல்லாப்பிழையும், கருதாப் பிழையும்...' என்று தொடங்கும் பாடலைப் பாடினார். அந்தப் பாட்டின் கடைசி வரியான எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் இறைவா!' என்று வணங்கவும் அவரது உடல் கட்டிலில் சரியவும் சரியாக இருந்தது. ஆம் சரவண முதலியார் சிவலோக பதவி அடைந்தார். சிவபூஜையின் பெருமையை முற்றிலும் உணர்ந்தார். 'கடவுள் இல்லை என்று இனி யார் உரைத்தாலும் தமது உறுதிப்பாடு மாறவே மாறாது' என்று இன்றும் உறுதியுடன் வாழ்ந்து வருகிறார் அவர்.
'பெருஞ்சொல் விளக்கனார்' என்று பெயர் பெற்ற அ.மு. சரவண முதலியாரின் திருமகனார் தமிழ்ப் பெராசிரியரும் அறிஞருமான திரு. அ. ச. ஞானசம்பந்தம் ஆவார்.


இது நான் Modern Tamil World ல் படிச்சது.

Monday, January 21, 2008

விடல புள்ள நேசம்..

அனுபவி
எல்லாம் அலுத்துவிடும்
அன்பைத் தவிர...

என் அருகில் இருப்பவர்
எல்லாரும் என்னை
நேசிப்பதும் இல்லை...

நான் நேசிப்பவர்கள்
என் அருகில்
இருப்பதும் இல்லை.


உன்னை ஒரு முறை சந்தித்தேன்
நீ பலமுறை என்னை
சிந்திக்க வைத்தாய்.

நானோ பலமுறை இப்போது
சிந்திக்கிறேன்
ஒரு முறையாவது உன்னை
சந்திக்க முடியுமா என்று....

நான் விரும்பும் உயிருக்கு
என் அன்பு புரியாது..
என்னை விரும்பும் உயிருக்கு
என்னைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.


தென்றல் காற்றாய் வந்தாய்
என்னை கட்டி சென்று விட்டாய்
உயிரற்ற பொம்மையாய்
கிடக்கிறேன், உன் காதலால்..

Saturday, January 19, 2008

How These Names Came About! !!!

Adobe - came from name of the river Adobe Creek that ran behind the house of founder John Warnock.

Apache - It got its name because its founders got started by applying patches to code written for NCSA's httpd daemon. The result was 'A PAtCHy' server -- thus, the name Apache.

Apple Computers - favourite fruit of founder Steve Jobs. He was three months late in filing a name for the business, and he threatened to call his company Apple Computers if the other colleagues didn't suggest a better name by 5 o'clock.

C - Dennis Ritchie improved on the B programming language and called it 'New B'. He later called it C. Earlier B was created by Ken Thompson as a revision of the Bon programming language (named after his wife Bonnie)

CISCO - its not an acronymn but the short for San Francisco.

Compaq - using COMp, for computer, and PAQ to denote a small integral object.

GNU - a species of African antelope. Founder of the GNU project Richard Stallman liked the name because of the humour associated with its pronuniciation and was also influenced by the children's song 'The Gnu Song' which is a song sung by a gnu. Also it fitted into the recursive acronym culture with 'GNU's Not Unix'.

Google - the name started as a jokey boast about the amount of information the search-engine would be able to search. It was originally named 'Googol', a word for the number represented by 1 followed by 100 zeros. After founders - Stanford grad students Sergey Brin and Larry Page presented their project to an angel investor, they received a cheque made out to 'Google'!

Hotmail - Founder Jack Smith got the idea of accessing e-mail via the web from a computer anywhere in the world. When Sabeer Bhatia came up with the business plan for the mail service, he tried all kinds of names ending in 'mail' and finally settled for hotmail as it included the letters "html" - the programming language used to write web pages. It was initially referred to as HoTMaiL with selective upper casing.

HP - Bill Hewlett and Dave Packard tossed a coin to decide whether the company they founded would be called Hewlett-Packard or Packard-Hewlett.

Intel - Bob Noyce and Gordon Moore wanted to name their new company 'Moore Noyce' but that was already trademarked by a hotel chain, so they had to settle for an acronym of INTegrated ELectronics.

Java - Originally called Oak by creator James Gosling, from the tree that stood outside his window, the programming team had to look for a substitute as there was another language with the same name. Java was selected from a list of suggestions. It came from the name of the coffee that the programmers drank.

thanks funtoosh.

Thursday, January 17, 2008

கல்லுக்கும் கூட இதயம் உண்டுங்க...

அட இத பாருங்க கல்லு கூட pray பண்ணுதாம். நிஜமாவே நல்லா தான்
இருக்கு....
Even Rocks Pray! – Visual
Tilt your head to the left to see the picture. You will be amazed at what you see. Look at the entire length of the picture......Way to the left!

மெளனமே பார்வையால்....

அதிகாலை இருள் பிரியும் முன்
என் நினைவலைகள் என்னை
தட்டி எழுப்பின..


"உன்னவன் தேடி வரும் நேரத்தில்
ஏன் இன்னும் உறக்கம்?"


மின்சாரம் தாக்கியதுபோல
துள்ளி எழுந்தேன்..


அதற்குள் வந்து விட்டான்
வந்தே விட்டான் என்னவன்.


என் தூக்கத்தை கலைக்க
விரும்பாமல்,
மெல்ல அடி எடுத்து
வரும் முன்னே
என் மனம் துள்ளி உணர்ந்து
ஓடி திறந்தது வாயில் கதவு.


அந்த நிமிடத்தில்
சந்தித்துக் கொண்டது
நான்கு கண்களும்..


பல கேள்விகளும் பதில்களும்
ஆம், கேட்கமுடியாத
கேள்விகளும் பதில்களும்.


"என் வரவுக்காக் இரவெல்லாம்
தூங்காமல் விழித்திருந்தாயா?"


"இல்லை, ஆனால் என் மனமும்
உணர்வும் தான் தூங்கவில்லையே",


"அப்படியானால் உனக்கு
ஆர்வமில்லையா?"


"இது என்ன வரும் முன்னே
விசாரனை?"


"ஏன் கேட்கக் கூடாதா?"


"ஆனால் உங்கள் கண்கள்
அப்படி சொல்லவில்லையே?"


"என்ன சொல்லிற்று?"


"ஏதோ என்னை ஏமாற்ற
திட்டம் தீட்டியது போலல்லவா
தெரிகிறது.."


"அப்படியா?
காட்டிக் கொடுத்து விட்டது,
துரோகி."


"சரி அந்த துரோகிக்கு
நான் சரியான தண்டனை கொடுக்கவா?"


"ஆகட்டும் மகாராணி"


"இந்த கண்களில் நான் என்றும்
உங்களின் அன்பை மட்டுமே
காண வேண்டும் ஆயுள்வரை".


இது தான் நான் கொடுக்கும் தண்டனை.


"நான் இந்த கண்களை கானாமல்
விட்டிருந்தால் என் வாழ்நாளில்
உன் அன்பை அறியாமலே
போயிருப்பேன்,


சரியான தண்டனைதான்."


"என் அன்பு அத்தனை உயர்ந்ததா?"


"உன் தூய்மையான அன்பிற்கு
உயர்வு தாழ்வு கூட உண்டா?"


"எத்தனை பாக்கியம் செய்திருக்கிறேன்
உன் இந்த அன்பையும் காதலையும் பெற.."

Wednesday, January 02, 2008

வேதனை..ஏன் இந்த கொலை வெறி?

மக்களே முதல்ல கீழ இருக்கற இந்த செய்தியை படிங்க:

புத்தாண்டு இரவில் கும்பலிடம் சிக்கிய பெண்கள் மானப்பங்கம்:

மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 2 ஜனவரி 2008 ( 11:39 IST )
புத்தாண்டு தின இரவில் மும்பையில் 2 பெண்களை சுமார் 80 பேர் கொண்ட கும்பல் ஒன்று சூழ்ந்துகொண்டு அவர்களது ஆடைகளை கிழித்து மானப்பங்கப்படுத்தியது.


புத்தாண்டு தினமான நேற்று இரவு 1.40 மணியளவில் 2 இளம் பெண்கள் தங்களது ஆண் நண்பர்கள் இரண்டு பேருடன் மும்பையின் பிரபலமான ஜூஹூ கடற்கரையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த சுமார் 40 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்களை சூழ்ந்துகொண்டு கிண்டல் செய்யத் தொடங்கியது. இதனால் மிரண்டு போன அந்த பெண்கள், தங்களை விட்டுவிடும்படி பெரும் குரலெடுத்து கத்தினார்கள்.ஆனால் அவர்கள் பயத்தில் கத்துவதை ரசித்த அந்த ரவுடிக் கும்பல், அவர்கள் உடலில் ஆங்காங்கே கைவைத்து மேலும் சீண்டத் தொடங்கினர்.

அப்போது அந்த் இடத்தில் மேலும் ஒரு கும்பல் வந்ததது.இதனால் கும்பலின் எண்ணிக்கை 70 முதல் 80 வரை ஆனது. எண்ணிக்கை கூடிப்போனதால் மேலும் தைரியம் பெற்ற அந்த கும்பல், தங்களது வக்கிர விளையாட்டை அரங்கேற்ற தொடங்கியது. அந்த இரண்டு பெண்களில் ஒருவரை அருகிலுள்ள மரத்திற்கடியிலும், மற்றொரு பெண்ணை வாகனம் ஒன்றின் பக்கத்திலும் தள்ளிக் கொண்டு சென்றனர்.அவர்களுடன் வந்த இரண்டு ஆண் நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அந்த பெரும் கும்பலின் வெறியாட்டத்தில் அவர்களால் அது முடியாமல் போனது.


இந்நிலையில், அந்த 2 பெண்களையும் தங்களது பிடிக்குள் கொண்டு வந்த அந்த கும்பல், அவர்கள் இரண்டு பேரது முகத்திலும் குத்தியது. இதனால் அந்த பெண்கள் நிலைகுலைந்துபோனார்கள்.அப்போது அந்த பெண்கள் அணிந்திருந்த ஜூன்ஸ் பேண்ட் மற்றும் ஸ்கர்ட்டையும் , மேலாடையையும் அவிழ்த்தும் , கிழித்தெறிந்தும் மானப்பங்கப்படுத்தியது அந்த கும்பல்.இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த பெண்கள் மீது சுமார் ஒரு டஜன் பேர் மேலே விழுந்து சில்மிசத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சிக்கிக் கொண்ட அந்த 2 பெண்களும் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 'இந்துஸ்தான் டைம்ஸ் ' நாளிதழின் புகைப்படக்காரர்கள் இருவர் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க நினைத்தபோதே அவ்வ்வழியாக போலீஸ் ரோந்து வேன் ஒன்று சென்றதை கண்டனர்.


உடனடியாக அவர்கள் போலீசாரை நோக்கி குரலெழுப்பினர்.இதனையடுத்து போலீஸ் வேன் அங்கு விரைந்தது.போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் அந்த பெண்களை விட்டுவிட்டு ஓட்டமெடுத்தது. போலீசார் அவர்களை விரட்டி சென்றபோதிலும் அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதனையடுத்து அந்த பெண்கள் இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.இருப்பினும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என ஜூஹூ காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பெண்கள் இருவரும் மானப்பங்கப்படுத்தப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள் ' இந்துஸ்தான் டைம்ஸ் ' நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,


மும்பைவாசிகளை இச்சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த புத்தாண்டு தினத்தன்றும் மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவில் இதே போன்று ஒரு பெண் மானப்பங்கப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்ற பெருமையை பெற்றிருந்த மும்பையில், தற்போது டெல்லியைப் போன்ற நிகழ்வுகள் நடந்தேறுவது, மும்பையும் விரைவில் டெல்லியாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ( நன்றி:மூலம்: தமிழ் யாகூ)


மக்களே நம்மோட நாடு எங்கே போயிட்டு இருக்கு? இதே மாதிரி இங்க பெங்களூரிலும் என்னோட நண்பர்களும் MG Road ல போயி இந்த புது வருஷம் எப்படி ஆரம்பிக்கிறார்கள் என பாக்க போனார்கள்.

அங்கயும் இதே மாதிரி சில அருவருக்கத் தக்க நிகழ்ச்சிகளால் மனம் நொந்து வேதனையோட தான் திரும்பி வந்தாங்க. அதுவும் 12 மணி வரைக்கும் பொறுமையாக இருந்த காமாந்தகர்கள் பின்னாடி தான் பெண்களை கண்ட இடத்திலும் கை வைத்து சீண்டி பார்ப்பதும் அதிலும் கொடுமை என்னன்னா, ஒரு வெளிநாட்டு பெண் தன்னோட ரெண்டு கைகளையும் பின்னாடி பிடித்துக் கொண்டு தான் போனாராம். கேட்டா நம் நாட்டு குடி(?) மக்கள் அவரோட பின்னாடியயை பிடித்தும் கிள்ளிப் பார்த்தும்தான் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னார்களாம். அவரும் பயத்துடனேயே ரொம்ப கஷ்டப் பட்டு கொண்டு சென்றாராம்.

நம் நாட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்டு மற்ற நாட்டு மக்கள் நம்மளப் பாத்து பெருமை படும் நேரத்தில் நம் நாடு எங்கே போயிக் கொண்டிருக்கிறது மக்களே? இத படித்த போது மனசு ரொம்ப கணத்து தான் போகிறது.