Monday, October 30, 2006

You are My Destiny

You Are My destiny

I lay my head on your
Shoulder, and I’m
Transported to a world
Of dreams, I
Dream of us together,
Forever, walking
Hand in hand,sharing
All our joys,sorrows,
Our ambitions,our lives
In your arms, are
My heaven and my earth,
and

YOU ARE MY DESTINY..


எல்லாரும் நிறைய்ய கவிதைகளா எழுதி தள்ளறாங்க,

நானும் என் பங்குக்கு எதோ சின்னதா ஒரு கிருக்கல்..









YOU ARE MY DESTINY.

Monday, October 02, 2006

டிகிரி அல்லது டிப்லமா.

நான் டிகிரி படிச்சிட்டு வேலைக்கு விண்ணப்பம் எழுதி கொண்டு இருக்கும் போது ஒரு கம்பனியில் இருந்து "டிகிரி அல்லது டிப்லமா ஆட்கள் தேவை" என்ற விளம்பரம் பார்த்துட்டு நானும் உடனே அதுக்கும் சேர்த்து மொத்தமா நாலு கம்பனிக்கு வின்னப்பம் எழுதி எல்லாம் சரி பாத்துட்டு உடனே போஸ்ட் பன்னிட்டு வந்தேன். ஒரு வாரத்தில் மூன்று கம்பனியில் இருந்தும் உடனே நேர்முகத் தேர்வுக்கு வருமாரு அழைப்பு வந்தது. அத பாத்த உடனே ரொம்ப சந்தோஷமா போயி நானும் அதுக்கு ரெடி பண்ண ஆரம்பிச்சேன். அந்த நல்ல நாளும் வந்தது. சீக்கரமா ரெடியாயி மொதல்ல ஒரு கம்பனிக்கு தேர்வுக்கு போயிட்டு வந்தேன். ம் அங்கயும் ஒகே ஆயி உடனே வேலைக்கு சேரச் சொன்னாங்க. அந்த கம்பனி மெட்ராஸ்ல ஹார்ட் ஆப் தி சிட்டியில ஒரு நல்ல வேல.உடனே சரின்னுட்டு சொல்லிட்டு வந்துட்டேன். வீட்டுக்கு வந்து பார்த்தா வேர ஒரு கம்பனியில ஒரு அழைப்பு. சரின்னுட்டு அதுவும் பார்க்கலாம்னுட்டு அதுக்கும் ரெடி யாயி போனேன்.ஒரு வழியாயிட்டேன். அங்க போனதுக்கப்பறம் தான் தெரிஞ்சது அது ஒரு எலக்ட்ரிகல் காண்டிராக்டர் கம்பனி. என்கிட்ட போயி கரண்ட பத்தியும் கான்டிராக்ட பத்தியும் கேட்டா நான் என்னாத்த சொல்றது?.தட்டி தடவி எதையோ சொல்லிட்டு வந்திட்டேன். எனக்கு தெரியும் இது அம்பேல்னு. வீட்டுக்க்கு வந்து சிரியோ சிரின்னு சிரிச்சேன்.


அப்ளிகேஷன் போடும்போதே ஒரு டவுட்டு தான்..!(?) ஹா எனக்கு எங்கயோ ஒரு மச்சம் இருக்குதுன்னு நினைக்கிறேன், உடனே வேலைக்கு வர சொல்லி "கால்" வந்தது. ஒரே சந்தோஷம். ஜாலியா வேலைக்கு போய் சேந்தேன்.அந்த கம்பனி மேனேஜர் சும்மா சொல்லக் கூடாது தொட்டு பொட்டு வச்சுக்கலாம், அப்படி ஒரு கலர்(கருப்பு) "எனக்கு கருப்பன்னாலே ஒரு அலர்ஜி. அதுவும் அந்த ஆள் கூடத்தான் என் வேலயே.!என் நிலம எப்படி இருக்கும்?" சரின்னுட்டு ஒரு வழியா வேலய கத்துகிட்டு, கொஞ்ச கொஞ்சமா என்ன நானே தேத்தி கிட்டு ஒரு வழியா பழகிட்டேன். அப்பறமா அந்த ஆளு(மேனேஜரு கரிவாயன்) நம்ம தெறமய பாத்துட்டு அசந்துட்டான் இல்ல. ஒரு நாள் பில் அடிக்கும் போது நான் ரொம்ப மெதுவா கேட்டேன், MCB, GI Pipe ன்னா என்னாது? அதுக்கு அந்த கரிவாயன், "உனக்கு தான் டிகிரிக்கும் டிப்லமாவுக்குமே வித்யாசம் தெரியாதெ,, அப்பறமா இதுக்கு மட்டும் சொன்னா தெரியுமா?"ன்னுட்டு போட்டானே ஒரு போடு.. அவ்வளவு தேன், அதுக்கு அப்பறம் அந்த கரிவாயன் கிட்ட எதுவுமே இல்ல....(!)அல்லாம் முடிஞ்சுது...!


இப்ப கூட யாராவது " நீ என்ன படிச்சிருக்க?" ன்னு கேட்டா ஒரு நிமிஷம் இதையெல்லாம் நினைச்சி சிரிப்பேன்.