Friday, July 11, 2008

ஆஹா கவிதை!!

நட்சத்திரங்களோடு கூடிய நிலா
அழகாக தெரிகிறது
இது நாள் வரை....



மேகங்கள் தழுவி செல்லும் நிலா
அழகாக தெரிகிறது
இன்று வரை

காரணம் இனியவளே நீ....

மனித வாழ்க்கையே ஒரு நாடகம்

படித்த போது வெறுத்தது.

ஆனால் என் வாழ்க்கையில்

நீ வந்த போது தான்

என் பாத்திரம் புரிந்தது

நானும் ஒரு நாயகன் என்று.

நீ உடுத்தும் ஆடைகள் எல்லாமே

ஒருவித அழகாகத் தானிருக்கின்றன.

புரிந்து கொண்டேன்,

நீ உடுத்துவதால்

உன் உடலின் மீது பட்டு

அவை அழகு பெறுகின்றது என்று.

டிஸ்கி: இது எல்லாமே ஆஹா FM ல இருந்து சுட்டது.மக்களே என் மீதுகேஸ் போட்டு விடாதீர்கள்.