Monday, January 28, 2008

சிவபூஜைப் பலன்கள்...

சிவ பக்தர்களுள் சிறந்தவர் அவர்; சைவத்தின் மூலமாகத் தெய்வவீகத்தைப் பரப்பியவர். அந்தக் காலத்திலேயே பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று சிவபெருமானின் புகழைப் பேசினார். கேட்போர் மனத்தின் இருளறு சொல்லிற்குச் சொந்தக்காரர். நித்தய சிவபூஜை செய்ததால் உலக இன்ப துன்பங்கள் அநித்தியம் என்பதைக் கண்டவர்; ஆதலால் மக்களுக்கு ஆழமான உணர்வுடன் ஆன்மிகத்தை எடுத்தோதினார். யார் அந்த சிவப்பழம்?


அவர்தான் சைவத் திரு. அ.மு. சரவண முதலியார். சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த-தமிழ் அறிஞர்களில் முக்கியமானவர்.
அந்த நிகழ்ச்சி ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது. தெய்வ பூஜை செய்பவர்கள் காலத்தை மீறித்தான் காணப்படுகிறார்கள். 1958-ஆம் ஆண்டு.


சரவண முதலியார் அப்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் உடல் நலமின்மையால் சேர்க்கப்பட்டிருந்தார். அனுதினம் சிவதியானமும் தேவார பாராயணமுமாக இருந்த அவருக்கு மருத்துவமனையிலும் தெய்வ சிந்தனை கை கூடியிருந்தது. அவருடன் அவரது மகனும் தங்கி சேவை செய்து வந்தார். டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியம் அந்தக் காலத்தில் புகழ் பெற்ற மருத்துவர். சரவண முதலியார் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் செட்டியார் ஒருவரும் சிகிச்சை பெற்றுவந்தார்.


அன்று டாக்டர் அவருக்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்த பிறகு அவருக்குத் ¨தைரியமூட்டும் வகையில், "செட்டியாரே, நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்களைச் சுகப்படுத்தி வீட்டிற்கு அனுப்ப வேண்டியது என் பொறுப்பு" என்று கூறினார்.


'சிவன் செயலே யாதும்' என்று தெளிந்த அறிவுடை சரவண முதலியார் இதைக் கேட்டு சிரித்துவிட்டார். இதனால் மருத்துவர் கோபிப்பாரே என்று முதலியாரின் மகன் உள்ளளூ பயந்தார். மகன் இவ்வாறு கலங்கி இருக்க தந்தையோ இன்னும் பெரிதாகித் தெய்வீகச் சிரிப்பு சிரிக்க, மருத்துவர் மெல்ல சரவண முதலியார் கட்டிலுக்கு வந்தார். அவர், "பெரியவரே, எதற்காக இப்போது சிரித்தீர்? சொல்லும்" என்று வினவினார்.

சரவண முதலியாரின் மகனுக்கும் இதே கேள்வி நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருந்தது. சரவண முதலியார் மெதுவாக, "டாக்டர், உங்களை அவமானப்படுத்த நான் சிரிக்கவில்லை. நீங்கள் கூறியதைக் கேட்டதும் எனக்கு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறிய ஓர் உபதேசம் நினைவிற்கு வந்தது.

"பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார்: 'இறைவன் இரண்டு முறை சிரிக்கிறார். ஒன்று, இரு சகோதரர்கள் தங்களுக்குள் நிலத்தைப் பிரித்து, குறுக்கே கயிற்றைப் பிடித்து, 'இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னடையது' என்று சொல்லிக் கொள்ளும்போது அவர் சிரித்தார். 'இந்தப் பக்கம் என்னுடையது. அதில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது என்கிறார்களே! என்று நினைத்து இறைவன் சிரிக்கிறார்.

"கடவுள் மேலும் ஒருமுறை சி¡¢க்கிறார். குழந்தையின் நோய் தீர்க்க முடியாததாக உள்ளது; தாய் அழுது கொண்டிருக்கிறான்; வைத்தியர் அவளிடம், "அம்மா, பயப்படாதே. நான் குணப்படுத்திவிடுகிறேன்" என்று சொல்கிறார்.
அப்போதும் கடவுள் சிரித்துக்கொள்கிறார். இறைவன்தான் எல்லோருடைய விதியையும் நிர்ணயிக்க முடியும். நடக்கக்கூடியதைத் தடுக்க யாராலும் முடியாது என்பது வைத்தியருக்குத் தொ¢யவில்லை." இவ்வாறு சரவண முதலியார் கூறிய தத்துவத்தை டாக்டர் ரத்தின வேல் சுப்பிரமணியம் கேட்டு உணர்ந்தார். அவர் அடிப்படையில் ஓர் ஆன்மிகவாதி. ஆதலால் அவர் தமது எண்ணத்தை மேம்படுத்திக் கொண்டார். அன்றிலிருந்து அவர் தினமும் சரவண முதலியாரிடம் வந்து அடிக்கடி பேசத் தொடங்கினார். அவர்கள் இருவரும் முக்கியமாக, பெரியபுராணம் பற்றி நேரம் போவது தெரியாமல் பேசுவார்கள்.
மருத்துவரின் பவரோகத்திற்கு சரவண முதலியார் தெய்வ மருந்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவர் தினமும் சரவண முதலியாரிடம் வந்து அடிக்கடி பேசத் தொடங்கினார். அவர்கள் இருவரும் முக்கியமாக, பெரியபுராணம் பற்றி நேரம் போவது தெரியாமல் பேசுவார்கள். மருத்துவரின் பலரோகத்திற்கு சரவண முதலியார் தெய்வ மருந்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.


இதனால் சரவண முதலியாரின் மகன் ஒரு நாள் தம் தந்தையிடம், "அப்பா, டாக்டரின் நேரம் பொன்னானது. அவரது சேவை எல்லோருக்கும் தேவை. அதோடு, அதிகமாகப் பேசி நீங்கள் உங்கள் உடல்நலத்தைக் கொடுத்துக் கொள்ளவேணடாமே" என்று விண்ணப்பித்துக் கொண்டார். இந்த விண்ணப்பம் மருத்துவரின் செவிக்கும் எட்டியது. அதனால் அவர் சரவண முதலியாரின் சிவபரமான விளக்கங்களைத் தமது பகலுணவு நேரத்தில் வந்து கேட்பார். முதலியாரும் சளைக்காது சொல்லிக் கொடுத்தார். சிறிது காலத்திற்குப் பிறகு சரவண முதலியார் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ஓரிரு மாதங்களுக்குள் சரவண முதலியார் மீண்டும் நோய்வாய்ப்பட்டார். இம்முறை அவருக்கு மருத்துவம் செய்தவர் டாக்டர் குருசாமி முதலியார். டாக்டர் குருசாமி முதலியாரும் நல்ல சிவபக்தர். அவரைப் பற்றி அந்தக் காலத்தில் இப்படியொரு நம்பிக்கை இருந்தது; அவர் தினமும் காலையில் சிவபூஜை செய்து முடித்துக் கதவைத் திறந்து வெளியில் வருவார். அப்போது முதலில் அவரது கண்ணில்படுபவரின் வியாதி பரிபூரணமாகக் குணமாகும் என்ற மக்கள் நம்பினார்கள். இது சிவபூஜை அவருக்குக் கொடுத்திருந்த பலன். அன்று சரவண முதலியார் மகனும் அவர்களது குடும்ப மருத்துவர் ஏ. தியாகராஜனும் அந்த மருத்துவரைக் காணச் சென்றிருந்தார்கள்.


டாக்டர் குருசாமி முதலியார் பூஜை நேரம் முடிந்து வெளியில் வந்தார். டாக்டர் தியாகராஜன் சரணவண முதலியாரின் உடல்நலக்குறைவு பற்றிக் கூறிவந்து பார்க்குமாறு வேண்டினார். அதற்கு குருசாமி முதலியார் "மார்ச் 15-ஆம் தேதி போகிறவரை 1-ஆம் தேதியே கூட்டி வந்து ஏனய்யா வம்பு செய்கிறீர்கள்?" என்று கூறினார்.


சரவண முதலியாரின் மகனை மருத்தவ கூறிய அந்தச் செய்தி நிலைகுலையச் செய்தது. பின்னர் குருசாமி முதலியார் மெதுவாக, "அவர் சிவபூஜை செய்பவர். அவரைப்பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

1950, மார்ச் 13-ஆம் தேதி வீட்டில் சரவண முதலியாருக்கு நினைவு தவறி 'கோமா' நிலை ஏற்பட்டது. 14-ஆம் தேதியும் நினைவு திரும்பவில்லை. மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள். சரவண முதலியாரின் குடும்பம் தத்தளித்தது. அவரது மகன் செய்வதறியாது திகைத்தார். அவர் மனதில் பல பிரச்சனைகள் தோன்றினாலும், நெஞ்சை வாட்டும் ஒரு கேள்வி மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. அது தந்தையின் ஆன்மிகத்தைப் பற்றியது. 'வாழ்நாள் முழுவதும் சிவபூஜை செய்த ஒருவர் இப்படித்தான் சாவதா? என் தந்தை பக்தியுடன் சிவபூஜையின் சிறப்பு இவ்வளவுதானா?' -இவ்வாறான கேள்விகள் அவரைத் துளைத்தன. சரியாக மார்ச் 15-ஆம் தேதியும் வந்தது. ஏற்கனவே டாக்டர் குருசாமி முதலியார் கூறியது நினைவிற்கு வரவே எல்லோரும் பந்தனர்.


ஆன்மிக சாதகர்கள் வாழ்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்குச் சாவதும் முக்கியமானது. சிவபூஜை செய்த ஒருவர் இப்படித்தானா மற்றவர் போல் மறைவது? வீட்டில் சரவண முதலியாரின் உறவினர்கள் அறைக்கு வெளியில் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். மகனின் மனதிலிருந்த கேள்விகள் தான் எல்லோர் மனதிலும் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்தச் சூழல் பரபரப்பு மிகுந்திருந்தது. இனி தந்தையின் குரலைக் கேட்கவே முடியாதா? இது முதலியார் மனைவியின் ஏக்கம். நினைத்து நினைத்து ஏங்கத்தான் முடியும் என்று மனதைத் திடப்படுத்தும் போதுதான் அந்த ஒலி கேட்டது. ஆ, அது சரவண முதலியாரின் இருமல் சப்தம் அல்லவா? எல்லோரும் அவசரமாக உள்ளே நுழைந்தார்கள். சரவண முதலியார் தம் நிலையைப் பற்றி கவலைப்படாமல் தமது மனைவியிடம்,"இன்று விசேஷமான நாள். நீ ஏன் இன்று இன்னும் குளிக்காமல் இருக்கிறாய்? போய் உடனே குளித்துவிட்டு, பூஜை செய்" என்று பணித்தார். அவரது மகனிடமும், மகளிடமும் அவ்வாறே கூறினார்.

பிறகு தமது மருமகளை அழைத்தார். மருமகளைத் தமது மகளாகத் கண்டவர் அவர். அவரது கைமேல் தமது கைகளை வைத்து மூடினார். அவ்வாறு அவர் செய்தது அந்தக் கைகளில் சிவலிங்கம் இருப்பதான மானசீக யாவனையை உணர்த்தியது.பின்னர், தாம் தினமும் செய்யும் சிவபூஜை மந்திரங்களை ஒவ்வொன்றாகக் கூற ஆரம்பித்தார்.'ஈசான மூர்த்தாய நாம: தத்புருஷ பத்ராய நம: என்று தொடர்ந்தார்.

பூஜை மந்திரங்களுக்குப் பிறகு தேவாரம், திருவாசகம் ஓத ஆரம்பித்தார். உலக பந்தத்திலிருந்து விடுபடும் ஜீவன் பரமாத்மாவைச் சென்றடையும் ஆன்ம யாத்திரைக்கான துதிப்பாடல்கள்தாம் அவை. அவைகளை அவர் அனுபவ ஆதங்கத்தோடு பாடினார். எல்லோரும் சரவண முதலியாரையே கவனித்துக் கொண்டிருந்தனர். திருவாசகப் பாடல்கள் சிலவற்றைப் பாடி முடித்தார். இறுதியாகப் பட்டினத்தாரின் 'கல்லாப்பிழையும், கருதாப் பிழையும்...' என்று தொடங்கும் பாடலைப் பாடினார். அந்தப் பாட்டின் கடைசி வரியான எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் இறைவா!' என்று வணங்கவும் அவரது உடல் கட்டிலில் சரியவும் சரியாக இருந்தது. ஆம் சரவண முதலியார் சிவலோக பதவி அடைந்தார். சிவபூஜையின் பெருமையை முற்றிலும் உணர்ந்தார். 'கடவுள் இல்லை என்று இனி யார் உரைத்தாலும் தமது உறுதிப்பாடு மாறவே மாறாது' என்று இன்றும் உறுதியுடன் வாழ்ந்து வருகிறார் அவர்.
'பெருஞ்சொல் விளக்கனார்' என்று பெயர் பெற்ற அ.மு. சரவண முதலியாரின் திருமகனார் தமிழ்ப் பெராசிரியரும் அறிஞருமான திரு. அ. ச. ஞானசம்பந்தம் ஆவார்.


இது நான் Modern Tamil World ல் படிச்சது.

Monday, January 21, 2008

விடல புள்ள நேசம்..

அனுபவி
எல்லாம் அலுத்துவிடும்
அன்பைத் தவிர...

என் அருகில் இருப்பவர்
எல்லாரும் என்னை
நேசிப்பதும் இல்லை...

நான் நேசிப்பவர்கள்
என் அருகில்
இருப்பதும் இல்லை.


உன்னை ஒரு முறை சந்தித்தேன்
நீ பலமுறை என்னை
சிந்திக்க வைத்தாய்.

நானோ பலமுறை இப்போது
சிந்திக்கிறேன்
ஒரு முறையாவது உன்னை
சந்திக்க முடியுமா என்று....

நான் விரும்பும் உயிருக்கு
என் அன்பு புரியாது..
என்னை விரும்பும் உயிருக்கு
என்னைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.


தென்றல் காற்றாய் வந்தாய்
என்னை கட்டி சென்று விட்டாய்
உயிரற்ற பொம்மையாய்
கிடக்கிறேன், உன் காதலால்..

Saturday, January 19, 2008

How These Names Came About! !!!

Adobe - came from name of the river Adobe Creek that ran behind the house of founder John Warnock.

Apache - It got its name because its founders got started by applying patches to code written for NCSA's httpd daemon. The result was 'A PAtCHy' server -- thus, the name Apache.

Apple Computers - favourite fruit of founder Steve Jobs. He was three months late in filing a name for the business, and he threatened to call his company Apple Computers if the other colleagues didn't suggest a better name by 5 o'clock.

C - Dennis Ritchie improved on the B programming language and called it 'New B'. He later called it C. Earlier B was created by Ken Thompson as a revision of the Bon programming language (named after his wife Bonnie)

CISCO - its not an acronymn but the short for San Francisco.

Compaq - using COMp, for computer, and PAQ to denote a small integral object.

GNU - a species of African antelope. Founder of the GNU project Richard Stallman liked the name because of the humour associated with its pronuniciation and was also influenced by the children's song 'The Gnu Song' which is a song sung by a gnu. Also it fitted into the recursive acronym culture with 'GNU's Not Unix'.

Google - the name started as a jokey boast about the amount of information the search-engine would be able to search. It was originally named 'Googol', a word for the number represented by 1 followed by 100 zeros. After founders - Stanford grad students Sergey Brin and Larry Page presented their project to an angel investor, they received a cheque made out to 'Google'!

Hotmail - Founder Jack Smith got the idea of accessing e-mail via the web from a computer anywhere in the world. When Sabeer Bhatia came up with the business plan for the mail service, he tried all kinds of names ending in 'mail' and finally settled for hotmail as it included the letters "html" - the programming language used to write web pages. It was initially referred to as HoTMaiL with selective upper casing.

HP - Bill Hewlett and Dave Packard tossed a coin to decide whether the company they founded would be called Hewlett-Packard or Packard-Hewlett.

Intel - Bob Noyce and Gordon Moore wanted to name their new company 'Moore Noyce' but that was already trademarked by a hotel chain, so they had to settle for an acronym of INTegrated ELectronics.

Java - Originally called Oak by creator James Gosling, from the tree that stood outside his window, the programming team had to look for a substitute as there was another language with the same name. Java was selected from a list of suggestions. It came from the name of the coffee that the programmers drank.

thanks funtoosh.

Thursday, January 17, 2008

கல்லுக்கும் கூட இதயம் உண்டுங்க...

அட இத பாருங்க கல்லு கூட pray பண்ணுதாம். நிஜமாவே நல்லா தான்
இருக்கு....
Even Rocks Pray! – Visual
Tilt your head to the left to see the picture. You will be amazed at what you see. Look at the entire length of the picture......Way to the left!

மெளனமே பார்வையால்....

அதிகாலை இருள் பிரியும் முன்
என் நினைவலைகள் என்னை
தட்டி எழுப்பின..


"உன்னவன் தேடி வரும் நேரத்தில்
ஏன் இன்னும் உறக்கம்?"


மின்சாரம் தாக்கியதுபோல
துள்ளி எழுந்தேன்..


அதற்குள் வந்து விட்டான்
வந்தே விட்டான் என்னவன்.


என் தூக்கத்தை கலைக்க
விரும்பாமல்,
மெல்ல அடி எடுத்து
வரும் முன்னே
என் மனம் துள்ளி உணர்ந்து
ஓடி திறந்தது வாயில் கதவு.


அந்த நிமிடத்தில்
சந்தித்துக் கொண்டது
நான்கு கண்களும்..


பல கேள்விகளும் பதில்களும்
ஆம், கேட்கமுடியாத
கேள்விகளும் பதில்களும்.


"என் வரவுக்காக் இரவெல்லாம்
தூங்காமல் விழித்திருந்தாயா?"


"இல்லை, ஆனால் என் மனமும்
உணர்வும் தான் தூங்கவில்லையே",


"அப்படியானால் உனக்கு
ஆர்வமில்லையா?"


"இது என்ன வரும் முன்னே
விசாரனை?"


"ஏன் கேட்கக் கூடாதா?"


"ஆனால் உங்கள் கண்கள்
அப்படி சொல்லவில்லையே?"


"என்ன சொல்லிற்று?"


"ஏதோ என்னை ஏமாற்ற
திட்டம் தீட்டியது போலல்லவா
தெரிகிறது.."


"அப்படியா?
காட்டிக் கொடுத்து விட்டது,
துரோகி."


"சரி அந்த துரோகிக்கு
நான் சரியான தண்டனை கொடுக்கவா?"


"ஆகட்டும் மகாராணி"


"இந்த கண்களில் நான் என்றும்
உங்களின் அன்பை மட்டுமே
காண வேண்டும் ஆயுள்வரை".


இது தான் நான் கொடுக்கும் தண்டனை.


"நான் இந்த கண்களை கானாமல்
விட்டிருந்தால் என் வாழ்நாளில்
உன் அன்பை அறியாமலே
போயிருப்பேன்,


சரியான தண்டனைதான்."


"என் அன்பு அத்தனை உயர்ந்ததா?"


"உன் தூய்மையான அன்பிற்கு
உயர்வு தாழ்வு கூட உண்டா?"


"எத்தனை பாக்கியம் செய்திருக்கிறேன்
உன் இந்த அன்பையும் காதலையும் பெற.."

Wednesday, January 02, 2008

வேதனை..ஏன் இந்த கொலை வெறி?

மக்களே முதல்ல கீழ இருக்கற இந்த செய்தியை படிங்க:

புத்தாண்டு இரவில் கும்பலிடம் சிக்கிய பெண்கள் மானப்பங்கம்:

மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 2 ஜனவரி 2008 ( 11:39 IST )
புத்தாண்டு தின இரவில் மும்பையில் 2 பெண்களை சுமார் 80 பேர் கொண்ட கும்பல் ஒன்று சூழ்ந்துகொண்டு அவர்களது ஆடைகளை கிழித்து மானப்பங்கப்படுத்தியது.


புத்தாண்டு தினமான நேற்று இரவு 1.40 மணியளவில் 2 இளம் பெண்கள் தங்களது ஆண் நண்பர்கள் இரண்டு பேருடன் மும்பையின் பிரபலமான ஜூஹூ கடற்கரையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த சுமார் 40 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்களை சூழ்ந்துகொண்டு கிண்டல் செய்யத் தொடங்கியது. இதனால் மிரண்டு போன அந்த பெண்கள், தங்களை விட்டுவிடும்படி பெரும் குரலெடுத்து கத்தினார்கள்.ஆனால் அவர்கள் பயத்தில் கத்துவதை ரசித்த அந்த ரவுடிக் கும்பல், அவர்கள் உடலில் ஆங்காங்கே கைவைத்து மேலும் சீண்டத் தொடங்கினர்.

அப்போது அந்த் இடத்தில் மேலும் ஒரு கும்பல் வந்ததது.இதனால் கும்பலின் எண்ணிக்கை 70 முதல் 80 வரை ஆனது. எண்ணிக்கை கூடிப்போனதால் மேலும் தைரியம் பெற்ற அந்த கும்பல், தங்களது வக்கிர விளையாட்டை அரங்கேற்ற தொடங்கியது. அந்த இரண்டு பெண்களில் ஒருவரை அருகிலுள்ள மரத்திற்கடியிலும், மற்றொரு பெண்ணை வாகனம் ஒன்றின் பக்கத்திலும் தள்ளிக் கொண்டு சென்றனர்.அவர்களுடன் வந்த இரண்டு ஆண் நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அந்த பெரும் கும்பலின் வெறியாட்டத்தில் அவர்களால் அது முடியாமல் போனது.


இந்நிலையில், அந்த 2 பெண்களையும் தங்களது பிடிக்குள் கொண்டு வந்த அந்த கும்பல், அவர்கள் இரண்டு பேரது முகத்திலும் குத்தியது. இதனால் அந்த பெண்கள் நிலைகுலைந்துபோனார்கள்.அப்போது அந்த பெண்கள் அணிந்திருந்த ஜூன்ஸ் பேண்ட் மற்றும் ஸ்கர்ட்டையும் , மேலாடையையும் அவிழ்த்தும் , கிழித்தெறிந்தும் மானப்பங்கப்படுத்தியது அந்த கும்பல்.இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த பெண்கள் மீது சுமார் ஒரு டஜன் பேர் மேலே விழுந்து சில்மிசத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சிக்கிக் கொண்ட அந்த 2 பெண்களும் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 'இந்துஸ்தான் டைம்ஸ் ' நாளிதழின் புகைப்படக்காரர்கள் இருவர் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க நினைத்தபோதே அவ்வ்வழியாக போலீஸ் ரோந்து வேன் ஒன்று சென்றதை கண்டனர்.


உடனடியாக அவர்கள் போலீசாரை நோக்கி குரலெழுப்பினர்.இதனையடுத்து போலீஸ் வேன் அங்கு விரைந்தது.போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் அந்த பெண்களை விட்டுவிட்டு ஓட்டமெடுத்தது. போலீசார் அவர்களை விரட்டி சென்றபோதிலும் அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதனையடுத்து அந்த பெண்கள் இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.இருப்பினும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என ஜூஹூ காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பெண்கள் இருவரும் மானப்பங்கப்படுத்தப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள் ' இந்துஸ்தான் டைம்ஸ் ' நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,


மும்பைவாசிகளை இச்சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த புத்தாண்டு தினத்தன்றும் மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவில் இதே போன்று ஒரு பெண் மானப்பங்கப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்ற பெருமையை பெற்றிருந்த மும்பையில், தற்போது டெல்லியைப் போன்ற நிகழ்வுகள் நடந்தேறுவது, மும்பையும் விரைவில் டெல்லியாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ( நன்றி:மூலம்: தமிழ் யாகூ)


மக்களே நம்மோட நாடு எங்கே போயிட்டு இருக்கு? இதே மாதிரி இங்க பெங்களூரிலும் என்னோட நண்பர்களும் MG Road ல போயி இந்த புது வருஷம் எப்படி ஆரம்பிக்கிறார்கள் என பாக்க போனார்கள்.

அங்கயும் இதே மாதிரி சில அருவருக்கத் தக்க நிகழ்ச்சிகளால் மனம் நொந்து வேதனையோட தான் திரும்பி வந்தாங்க. அதுவும் 12 மணி வரைக்கும் பொறுமையாக இருந்த காமாந்தகர்கள் பின்னாடி தான் பெண்களை கண்ட இடத்திலும் கை வைத்து சீண்டி பார்ப்பதும் அதிலும் கொடுமை என்னன்னா, ஒரு வெளிநாட்டு பெண் தன்னோட ரெண்டு கைகளையும் பின்னாடி பிடித்துக் கொண்டு தான் போனாராம். கேட்டா நம் நாட்டு குடி(?) மக்கள் அவரோட பின்னாடியயை பிடித்தும் கிள்ளிப் பார்த்தும்தான் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னார்களாம். அவரும் பயத்துடனேயே ரொம்ப கஷ்டப் பட்டு கொண்டு சென்றாராம்.

நம் நாட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்டு மற்ற நாட்டு மக்கள் நம்மளப் பாத்து பெருமை படும் நேரத்தில் நம் நாடு எங்கே போயிக் கொண்டிருக்கிறது மக்களே? இத படித்த போது மனசு ரொம்ப கணத்து தான் போகிறது.