Wednesday, April 18, 2007

புரிந்து கொள்ளுங்களேன் நண்பர்களே....

நண்பர்களே,

நாம் எப்போதும் ஒரு சில விஷயங்களை ஏன் தவறான
கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்?.

நான் என்னுடைய முன் பதிவில் ஒரு நல்ல நாளைப் பத்தி
நான் அறிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்ள தான் விரும்பினேன், அல்லாது நான் உங்களை
தங்கமோ வைரமோ தான் வாங்க வேண்டும் என்றோ
விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கத்தான் வேண்டும்
எந்த இடத்திலயாவது சொல்லியிருக்கேனா?

என்னுடைய சிறு வயதில் இது போல நாட்கள் ஒன்றும்
கொண்டாடியதை போல் நினைவில்லையே..!!! ஆனால்
இப்போது MOTHERS DAY, FATHERS DAY, INTERNATIONAL
WOMENS DAY FRIENDSHIP DAY...ETC ஏன் இது போல பல
திணங்கள் கொண்டாடப் படுகிறது என்றால் சொல்லத்
தெரியாது எனக்கு. இது எங்கு எப்போது எப்படி இத்தனை
ஆர்பாட்டத்தோடு ஆரம்பித்தது? அதுவும் எனக்கு தெரியாது.

அது போலத் தான் இந்த அட்சயத் த்ரிதியை நாளும்.
சமீப காலமாத் தான் இத்தனை ஆர்பாட்டங்களும்.
எங்கள் வீட்டில் நாங்கள் இந்த நாளில் எப்போதும்
ஏதாவது ஒரு நல்ல விஷயங்களுக்கு தான் ஆரம்பிப்போம்.
அந்த ஒரு நல்ல நோக்கோடு தான் நான் இந்த நாளைப்
பத்தி எழுதினேன். மக்கள் இந்த நாளில் என்ன வாங்க
வேணும் என்றோ அல்லது இதை தான் வாங்க வேண்டும்
என்றோ நான் சொல்லவே யில்லை. மேலும் நான்
இந்த நாளில் செய்யும் எந்த நல்ல காரியமும் பல நல்ல
நன்மைகளைத் தான் தரும் என்று தானே சொன்னேன்.

நான் எந்த தவறான மூட நம்பிக்கையும் நான் இதன்
மூலமாக சொல்லவேயில்லை. இப்போது எல்லாவற்றிக்கும்
கொண்டாட ஒரு நாள் தேவை படுகிறது. அது போலத்
தான் இந்த நாளும்.உங்களுக்கு எப்படி விருப்பமோ
அப்படி நீங்கள் கொண்டாடலாமே.. அதில் எந்த தவறும்
இல்லையே...

கொண்டாட ஒரு நாள்...அதை கொண்டாடுவது உங்கள்
விருப்பமே அன்றி அதில் எந்த ஒரு கட்டுப் பாடோ
அல்லது இப்படி தான் என்ற எந்த ஒரு கட்டாயமோ
இல்லவே இல்லை.

மேலும் நான் என் வீட்டில் இந்த நாளில் ஒரு ரூபாய்
கூட தங்கத்திலோ அல்லது விலையுயர்ந்த பொருளுக்கோ
செலவு செய்வதும் இல்லை.

5 comments:

dubukudisciple said...

neenga aduthavangalukaga eduku innoru post poteenga?? thevai illathathu.. avangaluku pidikalaina ada avanga padika vendame.. avalavu thaan.. namma blogla enna padivu podanam appadingarthu namma mudivu.. ada padikarthum padikathathum avanga virupam.. ada avangaluku pidicha follow pannatum illati vendam

ACE !! said...

//neenga aduthavangalukaga eduku innoru post poteenga?? thevai illathathu.. avangaluku pidikalaina ada avanga padika vendame.. avalavu thaan.. namma blogla enna padivu podanam appadingarthu namma mudivu.. ada padikarthum padikathathum avanga virupam.. ada avangaluku pidicha follow pannatum illati vendam //

Repeate!!! ithellam kandukaatheenga.. freeya vidunga..

Syam said...

யக்கா இதுக்கு போய் இவளோ பீல் பண்ணிட்டு இருக்கீங்களே...:-)

Syam said...

அரசியல் வாழ்க்கைல இது எல்லாம் சாதாரணம் அப்படின்னு விட்டுடனும்...ஜீனியர் விகடன் படிச்சீங்களா....என்னோட வயித்துல பால வார்த்து இருக்காங்க...இந்த வருசம் அட்சய திருதியை அன்னைக்கு தங்கம் வாங்க கூடாதாம் :-)

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Next Akshaya Thridhiai - andru kannaalam seidhaal enna aagum ?

May God Bless.