Monday, January 21, 2008

விடல புள்ள நேசம்..

அனுபவி
எல்லாம் அலுத்துவிடும்
அன்பைத் தவிர...

என் அருகில் இருப்பவர்
எல்லாரும் என்னை
நேசிப்பதும் இல்லை...

நான் நேசிப்பவர்கள்
என் அருகில்
இருப்பதும் இல்லை.


உன்னை ஒரு முறை சந்தித்தேன்
நீ பலமுறை என்னை
சிந்திக்க வைத்தாய்.

நானோ பலமுறை இப்போது
சிந்திக்கிறேன்
ஒரு முறையாவது உன்னை
சந்திக்க முடியுமா என்று....

நான் விரும்பும் உயிருக்கு
என் அன்பு புரியாது..
என்னை விரும்பும் உயிருக்கு
என்னைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.


தென்றல் காற்றாய் வந்தாய்
என்னை கட்டி சென்று விட்டாய்
உயிரற்ற பொம்மையாய்
கிடக்கிறேன், உன் காதலால்..

7 comments:

Dreamzz said...

ஆஹா... ஏன் இவ்ளோ சோகம்... but.. கவிதை பிரமாதம் :)

ரசிகன் said...

அவ்வ்வ்வ்...எப்படிங்க மின்னல் இப்படியெல்லாம்.. கலக்கறிங்க..சூப்பரு..

//தென்றல் காற்றாய் வந்தாய்
என்னை கட்டி சென்று விட்டாய்
உயிரற்ற பொம்மையாய்
கிடக்கிறேன், உன் காதலால்..//

ஆஹா.. அருமை அருமை.. நல்லாயிருக்குங்க...

dubukudisciple said...

enna achu sumathi ungaluku??
ore kavidai mazhai pozhigirathu???

Sumathi. said...

ஹாய் டிரீம்ஸ்,

//ஆஹா... ஏன் இவ்ளோ சோகம்... but.. கவிதை பிரமாதம்.//

எல்லாம் சும்மா தான்.

Sumathi. said...

ஹாய் ரசிகா,


ரொம்ப தேங்க்ஸ். ரசிச்சதுக்கு.

Sumathi. said...

ஹாய் டிடி,

ஆமாம், சும்மாதான் ஒரு சேஞ்சுக்கு.

ஹாய் வேதா,

//அக்கா என்னதிது? நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் தாங்காது ஆனா கவிதை சூப்பர்.//

அது என்ன நீங்களுமா? நான் போடக் கூடாதா?
ஆமாம், நீங்கல்லாம் எழுதறத விடவா?

Anonymous said...

Dear Sumathi,
Inru dhan unga blog ai parkiren.

Intraiya en manadhin kelvigaluku oru vidai madhiri irundhahdu ungalin indha kavidhai.
Thank you so much.

Azhagana unmaigal...

அனுபவி
எல்லாம் அலுத்துவிடும்
அன்பைத் தவிர...

என் அருகில் இருப்பவர்
எல்லாரும் என்னை
நேசிப்பதும் இல்லை...

நான் நேசிப்பவர்கள்
என் அருகில்
இருப்பதும் இல்லை.

Beautiful......

With Love,
Usha Sankar.