Tuesday, September 26, 2006

தள்ளுபடி தள்ளுபடி ....

நம்ம சிங்காரச் சென்னையில எந்த தெருவில போனாலும் குறைஞ்சது மூணு நாலு பூக்காரியாவது இருப்பாங்க. அதுல்லாம சில சமயம் வீட்டுக்கு வேர வந்து சிலர் பூ குடுத்துட்டு போவாங்க.இந்த பூ கடைல இருக்கறவங்க எப்படி தான் நம்மல ஏமாத்தராங்க.... சாயங்காலம் மூணு மணியானா போதும் எல்லா மொக்கயும் கட்டி ஒரு முழம் முணூ ருபான்னு ஆரம்பிச்சு போகப் போக ஏழு மணிக்கு மூனு முழம் அஞ்சு ருபாய்க்கு எறங்கி வருவாங்க... அப்பறமா நம்ம கண்ணு முன்னாலயே நம்மல ஏமாத்துவாங்க பாருங்க..அது அதான்.. அதே தான்... தப்பி தவறி நீங்க கேட்டு பாருங்க.. சும்மா சிங்கார தமிழுல செம்மொழியில "இதொடா...சாவு கிராக்கி...வந்ச்சி பாரு நமக்குனு..." ஆரம்பிச்சி சும்மா பின்னிடுவாங்க...தமிழ்ல ... சரி அதையும் தாண்டி நம்ம ஆட்டோ...! தமிழ் அடுத்த செம்மொழி... அத்த வுடு.. அப்பால நம்ம ஆட்டோ காரனுங்க கையில மட்டும் ஊரு பேரு தெரியாத ஆளுங்க மாட்னா..மவனெ நீ காலி..சொம்மா சுத்தி சுத்தி காட்டுவானுங்க பாரு...அவ்ளோதான் உங்கிட்ட இருக்கிற மொத்தத்தையும் புடிங்கிகினு தான் வுடுவானுங்க...
அப்பால நம்ம காய்கறி காரனுங்க...ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இவனுங்க ரவுசு தாங்க முடியலப்ப...அது சரி நம்ம சென்னையில தி நகருன்னு ஒரு எடம் கேட்டுரிக்கீயா? அதாம்பா நம்ம சன் ம்யுசிக்குல சும்மா காலயில தொடங்கினா ராத்திரி வரைக்கும் சும்மா போடுவானுங்க பாரு மனுசன சாவடிப்பாங்க போ.... இதுல வேற டி.வி வாங்கினா சிடி இனாமாம்,,,, ப்ரிட்சு வாங்கினா ட்.வி இனாமாம்.......எனக்கு ஒரு சண்தேகமுங்கோ... ரெண்டு பொண்ணுங்க இருக்கிற ஊட்ல ஒன்னு கட்னா இன்னொன்னு இனாமா குடுப்பாங்கலா?... இப்பாலாம் எதுக்கு தான் இனாமுன்னே இல்லப்பா.. எல்லாத்துக்கும் தான்.... அத்த வுடு,, நம்ம ஊருல கடைங்கல சொம்மா ஷோக்கா காட்டிட்டு சொம்மா நம்மல ஏமாத்துறானுங்க பாரு.....! அதுவும் ரெண்டு
ட்ரெஸ்ஸு வாங்கினா ஒன்னு ப்ரியா குடுக்குறானுங்கப்பா....இப்டி எல்லாத்துக்கும் ப்ரி குடுத்துகினே போனா ....எங்க பொயி நிக்கும்...?என்னவோப்பா நமக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது....


முன்னாடி எல்லாம் புது வருஷத்துக்கு தான் தள்ளுபடி போடுவாங்க... ஆனா இப்ப எல்லாத்துக்கும் தள்ளுபடி.... ஆடி னாதள்ளுபடி... ஆடல னா தள்ளுபடி....இது சென்னைல
மட்டும் தான்னு நினைசீங்களா.... இப்ப எல்லா ஊருலயும் வந்திடுச்சி....போதா கொறய்க்கி
தள்ளுபடியில்லாம ஒரு சாமான் வாங்கினா ..... இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கெல்லாம் ஜெயிலு தானுங்கோ....அப்படின்னு ஒரு சட்டம் வரப் போகுதுங்கோ.......எல்லாரும் உஷாருங்கோ......

2 comments:

Anonymous said...

ஒரு ப்லொக் ஆரம்பிச்சா இன்னொரு ப்லொக் இனாமா குடுப்பாங்கலா?

(ப்லொகெ இனாம் தாங்க....!)

Anonymous said...

Hi Sumathi,

Enakku oru doubt. Oru dhadavai Jailukku ponaa ennoru dhadavai anuppuvaangalaa or neenga ennai anuppuveengalaa ?

NB : I believe u will save me from going behind the bars (ofcourse, for having rescued me I can expect once more - Cos everything twice - right ?)